அதிகாலையில் வீட்டில் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை 

இனந்தெரியாத மூன்று நபர்கள் இன்று அதிகாலை குறித்த வீட்டுக்கு வந்ததாகவும், யாரையோ  ஜன்னல் ஒன்றினூடாக தேடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜுலை 19, 2023 - 11:31
அதிகாலையில் வீட்டில் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை 

அம்பலாந்தோட்டை கொக்கல்ல பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து 62 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இன்று (19) காலை இனந்தெரியாத ஆயுததாரிகள் மூவர் உயிரிழந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனந்தெரியாத மூன்று நபர்கள் இன்று அதிகாலை குறித்த வீட்டுக்கு வந்ததாகவும், யாரையோ  ஜன்னல் ஒன்றினூடாக தேடியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது வீட்டினுள் இருந்த சிறுமி ஒருவர் அவர்களைப் பார்த்து கூச்சலிட்டதால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர், அங்கு வந்துள்ளார்.

எனினும், அந்த நேரத்தில் துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 62 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!