மகரகம தீ விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது, வீட்டு உரிமையாளர் மீது சந்தேகம்
மகரகமவில் உள்ள இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் அந்த வீட்டின் உரிமையாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், இதன் மூலம், இந்தத் தீ வைப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
மேலும், வீட்டின் உரிமையாளரே தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
முன்னதாக, இந்தச் சம்பவத்தில் வீட்டு உரிமையாளரின் 55 வயது தாயும் அவரது 16 வயது மகளும் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
