ஜேர்மனிக்கு செல்லவுள்ள கில்மிஷா மற்றும் அஷானி!
இந்திய தனியார் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற சரிகமப பாடல் போட்டியில் மகுடம் சூடிய இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் அஷானி ஆகியோர் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குபற்ற உள்ளனர்.
எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனும் இடத்தில் குறித்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சிில் சரிகமப பாடல் போட்டியில் இறுதிப் போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா மற்றும் கனிஷ்கர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

