நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்

நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கொஷி கிராமத்திற்குள் புகுந்த போகோஹராம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வமைப்புகள் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை குறிவைத்து கடத்தல் சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நைஜீரியாவின் பொர்னோ மாகாணத்தில் உள்ள கொஷி கிராமத்திற்குள் புகுந்த போகோஹராம் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 300 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர