இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா-பிரிட்டன் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதல்
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்கா-பிரிட்டன் இணைந்த ராணுவ தளமான டியாகோ கார்சியாவை நோக்கி ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் அரைஅரச செய்தி நிறுவனம் ‘மெஹ்ர்’ வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுவதாகவும், தங்களின் ஏவுகணை திறன் எதிரிகள் நினைத்ததை விட அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், Wall Street Journal வெளியிட்ட தகவலின்படி, இந்த ஏவுகணைகள் தளத்தை நோக்கி ஏவப்பட்டாலும், அவை இலக்கைத் தாக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழலில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
