ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16, 2023 - 13:16
ரோகித் சர்மா நீக்கத்தை அடுத்து, மும்பை அணியை பழிவாங்கும் ரசிகர்கள்!

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் ஃபாலோவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 1.5 லட்சம் வரை சரிந்துள்ளது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி அடுத்த சீசனுக்கான வீரர்களின் ஐபிஎல் ஏலம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அணி நிர்வாகங்களும் மும்முரமாக தயாராகி வருகின்றன. 

ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பாகவே அது குறித்த பரபரப்பான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பாகவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருபவர் ரோகித் சர்மா. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10 ஆண்டுகாலம் இருந்து வந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று (15) விடுவித்தது. அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியின் புதிய கேப்டனாக நியமித்திருக்கிறது.

2013ம் முதல் 2023 வரை தொடர்ந்து 10ஆண்டுகள் மும்பை அணியின் கேப்டனாக இருந்தவர் ரோகித் சர்மா . இதில் 2013, 2015, 2017, 2019, 2020 என 5 முறை மும்பை அணி ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது.

அதே நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை வியாபார நோக்கில் குஜராத் அணியுடன் பேசி தங்கள் வசம் கொண்டு வந்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதையும் படிங்க: பிராத்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டுமா? முகமது ஷமி காட்டம்!

குஜராத் அணியை கடந்த 2 ஆண்டுகள் வெற்றிகரமாக வழிநடத்திவ் வந்தவர் ஹர்திக் பாண்டியா. 2022-ல் ஹர்திக்கின் தலைமையின் கீழ் தான் அந்த அணி கோப்பை வென்றது. தற்போது குஜராத் அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மும்பை அணியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டே ரோகித் சர்மா கேப்டனாக விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆக்கப்பட்டிருக்கிறார் என மும்பை அணி விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே, 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை திடீரென மும்பை இந்தியன்ஸ் அணி மாற்றியது அந்த அணியின் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் ரோகித்துக்கு ஆதரவாகவும் மும்பை அணியை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர். இதே போல இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியை இன்ஸ்டாகிராமில் பின் தொடரும் ஃபாலோயர்கள் எண்ணிக்கை மளமளவென சரிந்து வருகிறது. இது வரை சுமார் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் Unfollow செய்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!