60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு புதிய நிதி நிவாரணம் அறிமுகம்!
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பை வழங்கும் முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்காக புதிய நிதி நிவாரணமொன்றை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
60 வயது அல்லது அதற்கு கூடுதலான வயதுடைய மற்றும் வருடாந்த வருமானம் 1,200,000க்கும் அதிகரிக்காத சிரேஷ்ட பிரஜைகள் மீளளிப்பினை பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் 05 சதவீதத்தினால் கழிக்கப்பட்ட முற்பண வருமான வரியின் மீளளிப்பை வழங்கும் முறையை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
சிரேஷ்ட பிரஜைகள் காலாண்டுக்கு 25,000 ரூபாயை மீளளிப்பாக கோர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.