30 வீதம் உயர்ந்துள்ள மரக்கறி விலை... பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தி 

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்டோபர் 31, 2023 - 18:39
30 வீதம் உயர்ந்துள்ள மரக்கறி விலை... பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள உற்பத்தி 

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை 30 வீதம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 400 முதல் 420 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையிலும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.

பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறி தோட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதனால் மரக்கறிகளின் விலைகள் சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், முட்டைக்கோஸ், தக்காளி போன்ற மரகறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் காய்கறிகளின் இருப்பு வெகுவாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!