கிராம உத்தியோகத்தராக எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் இதோ!

சுமார் 3000 கிராம  உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

நவம்பர் 3, 2023 - 14:39
கிராம உத்தியோகத்தராக எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் இதோ!

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுமார் 3000 கிராம  உத்தியோகத்தர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிராம உத்தியோகத்தர்களின் வெற்றிடங்கள் உள்ள தொலைதூர பிரதேசங்களில் விசேட தகைமையின் அடிப்படையில் பரீட்சையை நடாத்திய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!