இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

பெப்ரவரி 22, 2024 - 11:45
பெப்ரவரி 22, 2024 - 11:46
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் இன்று (22) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலையே காணப்படக்கூடும்.

இதேவேளை, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!