உயர்தர மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து இதனை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை தற்போது பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து இதனை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் இணையத்தளத்திற்கு பிரவேசித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும், பரீட்சார்த்திகள் இரத்து செய்யப்பட்ட பரீட்சைக்கு தோற்றிய அதே பரீட்சை நிலையத்தில் புதிய வினாத்தாள் பரீட்சைக்கு தோற்றினால், அனுமதி அட்டை தேவையில்லை என்றும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தர விவசாய வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக வெளியான நிலையில், அந்த பரீட்சை முழுமையாக ரத்துச் செய்யப்பட்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விவசாய வினாத்தாளின் இரண்டாம் பகுதி காலை 08.30 மணி முதல் 11.40 மணி வரையிலும், முதல் பகுதி பிற்பகல் 01 மணி முதல் 3 மணி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.