பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு வர்த்தமானி இரத்து
வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாயை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு அறிவித்துள்ளது.