மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

ஆகஸ்ட் 1, 2023 - 12:45
மீண்டும் அதிகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள்

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, நேற்று (31) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

மேலும், ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோல் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 375 ரூபாயாகும்.

இதேவேளை, ஒரு லீற்றர் டீசலின் விலை 2 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 306 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் விலை லீற்றர் ஒன்றிற்கு 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 358 ரூபாயாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 226 ரூபாயாகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!