கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பியோட்டம்
பொலன்னருவவில் உள்ள கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் (03) புனர்வாழ்வு மையத்திலிருந்து கைதிகள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
