ராகமையில் துப்பாக்கிச்சூடு; சிறுவன் உட்பட மூவர் காயம்!
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ராகமை, வல்பொல பிரதேசத்தில் இன்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் காயமடைந்தவர்களில் 17 வயதுச் சிறுவனும் உள்ளதாகவும் ராகமை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.