போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது 

போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜுலை 11, 2024 - 14:21
போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது 

போலி அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

42 மற்றும் 60 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மடவளை மற்றும் கண்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து கண்டி தலதா வீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (News21)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!