தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் காரணமாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஒக்டோபர் 18, 2023 - 19:08
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் காரணமாக தங்கத்தின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெளிநாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உள்ளூர் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டு சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் இந்த வாரம் 1,820 டொலரில் இருந்து 1,925 டொலராக அதிகரித்துள்ளது.

இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 7,000 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் தற்போது 173,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அதே அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!