வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானிக்கிறது என்றால், அதற்கான வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்காமல் பராமரிக்க தீர்மானித்துள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.