கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து - 13 பேர் காயம்
விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நாகொட - கலஸ்ஸ பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 13 பேர் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்று திடீரென திரும்ப முற்பட்ட நிலையில், பஸ் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது பஸில் சுமார் 60 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.