பஸ் - லொறி மோதி ஏற்பட்ட விபத்தில்  நான்கு பேர் காயம்!

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

மே 8, 2025 - 15:06
பஸ் - லொறி மோதி ஏற்பட்ட விபத்தில்  நான்கு பேர் காயம்!

தங்காலை - ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் ரன்ன வாடிகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று  (08) காலை 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தனியார் பஸ், வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி உள்ளது.

இந்த விபத்தில், பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!