அஸ்வெசும புதிய விண்ணப்பங்களுக்கான திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு!

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19, 2024 - 16:42
ஜனவரி 19, 2024 - 16:43
அஸ்வெசும புதிய விண்ணப்பங்களுக்கான திகதி சற்றுமுன்னர் அறிவிப்பு!

அஸ்வெசும திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைப்பதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி இன்று (19) அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பெப்ரவரி முதல் வாரத்தில் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை கிடைத்துள்ள 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தை தாண்டியுள்ளதாகவும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார். 

மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகள் காரணமாக இதுவரை அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொண்ட 5,209 குடும்பங்கள், அந்த சலுகையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், புதிதாக தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு, கடந்த ஜூலை மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான தவணைக் கொடுப்பனவை கூடிய விரைவில் வங்கி கணக்கில் வைப்பிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!