அஸ்வெசும ஜூலை மாத கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு
அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அஸ்வெசும பயனாளிகளின ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும முதல் கட்ட பயனாளிகளில் 1,424,548 பயனாளி குடும்பங்களுக்கு 11,296,461,250 ரூபாய் உதவித் தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் ஜூலை 24 முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியுமென, நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.