அடுத்த ஆண்டு பாடசாலை பரீட்சைகள் குறித்து வெளியான அறிவிபபு
கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரணத் தரம், உயர்தரம் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பரீட்சைகளை அடுத்த வருடம் குறித்த நேரத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுவது எப்போது? - வெளியான தகவல்!
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக பரீட்சை நேரங்களை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.
