தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க  வேண்டும்: மைத்திரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். 

டிசம்பர் 6, 2023 - 02:29
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க  வேண்டும்: மைத்திரி

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகள் போன்று  இலங்கையிலும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாதொழிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

கடந்த புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவில் 99 சதவீதமான மாணவர்கள் பரீட்சை எழுதுவது  சிரமம் எனக் கூறி அழுததாகவும் அவர்களின் பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு பரீட்சை மிகக் கடினமாக இருப்பதாகவும் கூறி குற்றஞ்சாட்டியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

எனவே, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்தார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!