மதுபானம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன

ஆகஸ்ட் 3, 2023 - 13:45
மதுபானம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

மதுபான நிலையங்களில் விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார்.

“கடந்த வருடம் ஒரு ஸ்டிக்கரை அறிமுகம் செய்தோம். மதுபான போத்தலை வாங்கும் போது இது உண்மையான சரியான தயாரிப்பு என்று ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும்.

ஆனால், இப்போது ஸ்டிக்கர்களுக்குப் பதிலாக வேறு ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதனை தடுக்க இந்த வாரம் முதல் ஒரு பெரிய திட்டத்தை செயல்படுத்துவோம். யாரேனும் அதனை செய்தால் கவனமாக இருங்கள். அவர்களை கைது செய்து சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம்” என்றார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!