இன்று முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மே 12, 2025 - 11:18
இன்று முதல் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான அறிவிப்பு

இன்று (12) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமையில் சிறிது அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!