இடையூறு ஏற்படாத வகையில் நாடளாவிய ரீதியில் தாதியர் போராட்டம்!

தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடையூறு ஏற்படாத வகையில் நாடளாவிய ரீதியில் தாதியர் போராட்டம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தாதியர் சேவையிலுள்ளவர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

அண்மையில் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில், தாதியர் சேவை கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கூறியுள்ளார்.

அத்துடன், போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -