மின் கட்டணம் செலுத்துவது தொடர்பில் பாவனையாளர்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

பில் கட்டண கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை அறிவித்து உள்ளது.

ஜனவரி 30, 2024 - 15:08
ஜனவரி 30, 2024 - 15:28
மின் கட்டணம் செலுத்துவது தொடர்பில் பாவனையாளர்களுக்கு  விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மின்சார சபையானது மின்சார பாவனையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கான பல வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பில் கட்டண கொடுப்பனவுகளை மிகவும் இலகுவாக மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, CEBCare மொபைல் செயலி ஊடாகவும், இணைய வங்கிச் சேவைகள் ஊடாகவும், CEB இணையத்தளத்தின் ஊடாகவும், இலங்கை தபால் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள், Cargills, Keel's போன்ற பல்பொருள் அங்காடிகள் மற்றும் mCash மூலமாகவும் மின் கட்டணங்களைச் செலுத்தும் வசதி நுகர்வோருக்கு உள்ளது. .

மின்சார கட்டணங்கள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் தொடர்பில்  1987 என்ன இலக்கத்துக்கு அழைக்க முடியும் என, இலங்கை மின்சார சபை அறிவித்து உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!