இலங்கையில் யானை-மனித மோதலைத் தடுக்க மூங்கில் ‘உயிரியல் வேலி’: சீனா ஆதரவு

இலங்கையின் பரந்த பசுமை மேம்பாட்டு இலக்குகளுக்கு பங்களிப்பதோடு, நாட்டின் மிகவும் சவாலான வனவிலங்கு பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஒன்றுக்கு இது தீர்வாக அமையும்.
இலங்கையில் யானை-மனித மோதலைத் தடுக்க மூங்கில் ‘உயிரியல் வேலி’: சீனா ஆதரவு
AI generated image
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கு ஒரு நிலையான தீர்வாக மூங்கில் "உயிரியல் வேலி" (bio-fences) அமைக்கும் திட்டத்துக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

சூழலியல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த முன்மொழிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்தச் சந்திப்பின் போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்துறை தயாரிப்புகள் குறித்து இலங்கைத் தூதுக்குழுவினர் ஆராய்ந்தனர்.

யானை-மனித மோதலைக் குறைப்பதற்கு மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்க சீனாவின் உதவியை இலங்கை கோரியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நடைமுறைகள் மூலம் ஆதரவளிக்க சீனத் தரப்பு உறுதியளித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சின் தகவல்களின்படி, இந்த முயற்சி பின்வரும் முக்கிய நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது:

யானை-மனித மோதலைத் தணிப்பதற்கான ஒரு சுற்றுச்சூழல் நட்பு அணுகுமுறையாக இது அமையும்.

மூங்கில் சார்ந்த தொழில்கள் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இலங்கையின் பரந்த பசுமை மேம்பாட்டு இலக்குகளுக்கு பங்களிப்பதோடு, நாட்டின் மிகவும் சவாலான வனவிலங்கு பாதுகாப்புப் பிரச்சினைகளில் ஒன்றுக்கு இது தீர்வாக அமையும்.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர