கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது.

ஒக்டோபர் 25, 2025 - 07:12
கடைசிப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம்? சுப்மன் கில்லுக்கு ஓய்வு, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி நாளை (செப்டம்பர் 29) விளையாட உள்ளது. இந்திய அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், ஆறுதல் வெற்றியை நோக்கமாகக் கொண்டு களமிறங்க உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்தக் கடைசி ஆட்டத்தில் மாற்றம் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசியக் கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எனத் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதனால், டி20 தொடருக்கு முன்பாக அவருக்கு ஓய்வு கொடுக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவெடுத்துள்ளார் என்று தெரிகிறது.

கில் ஓய்வெடுப்பதால், அணியின் துணைக் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டு வருகிறார். எனவே, சுப்மன் கில்லுக்கு மாற்றாக இவரைத் தயார் செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில்லுக்குப் பதிலாக மாற்றுத் தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணியுடன் நீண்ட காலமாகப் பயணித்து வந்தாலும், ஜெய்ஸ்வால் இதுவரை ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டுமே ஆடியிருக்கிறார்.

ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதற்குப் பின்னால் உள்ள முக்கியக் காரணங்கள், அவரை 2027 உலகக்கோப்பைத் தொடருக்காகத் தயார் செய்வது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், ஜெய்ஸ்வாலுக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளில் அவர் பெரிய சாதனைகளைப் படைத்தால், அது ரோகித் சர்மாவின் ஓய்வு முடிவும் விரைவாக எடுக்கப்படும் சூழ்நிலையை உருவாக்கலாம். ஒருவேளை ரோகித் சர்மா திடீரென ஓய்வை அறிவித்தால், அவரது இடத்தில் விளையாட ஜெய்ஸ்வால் தயாராக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தொடரை இந்திய அணி ஏற்கெனவே இழந்துவிட்டதால், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு வழங்க கம்பீர் முடிவெடுத்திருக்க அதிக வாய்ப்புள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது. இதனால், நாளைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!