வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பலி
விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது. அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர்.
கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொறி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் லொறி சாரதியை கைது செய்தனர். திருமணத்துக்கு சென்ற நிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.