கனடாவில் சடலமாக நால்வர் மீட்பு; வெளியான தகவல்
கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து நான்கு நபர்கள் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவமானது, “கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம்” என கனடா பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும், இந்த மரணங்கள் கொலையா? அல்லது விபத்தா? என்பது பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவத்தினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தல்களும் கிடையாது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.