கல்கிஸை துப்பாக்கிச் சூட்டில் 19 வயது இளைஞன் பலி
கல்கிஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.