நாளை பல பகுதிகளில் 12 மணி நேரம் நீர் வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10, 2024 - 16:36
ஆகஸ்ட் 10, 2024 - 16:37
நாளை பல பகுதிகளில் 12 மணி நேரம் நீர் வெட்டு

நாட்டின் பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபை பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும். 

அத்துடன், மஹரகம, தொம்பே, கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ம பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்படும்.

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சாரம் இடைநிறுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!