கொழும்பில் 12 மணி நேர நீர்வெட்டு
நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பிற்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (16) மாலை 06 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 06 மணி வரை 12 மணி நேரம் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, அந்த சபை அறிக்கை வௌியிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.