வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு
காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
பேலியகொடை, வத்தளை, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை, களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.