பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 17, 2023 - 19:33
பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி சடலமாக மீட்பு

கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மைதானத்துக்கு பொறுப்பாக இருந்த பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது சடலம் இன்று (17) காலை மைதானத்திற்கு அருகிலுள்ள கட்டடத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட போது அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய குமார சம்பத் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!