இன்றும் நாளையும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு நேரம்
இன்று (1) மற்று நாளை (2) இரண்டு மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க இதனைக் தெரிவித்துள்ளார்.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன் இரவு வேளையில் குறித்த வலயங்களில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.