இன்றிலிருந்து மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு

இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இவ்வாறு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நவம்பர் 28, 2022 - 15:06
மார்ச் 7, 2023 - 15:59
இன்றிலிருந்து மின்வெட்டு நேரம் நீடிக்கப்படுவதாக அறிவிப்பு

மின்வெட்டு நேரம் 

நாட்டில், இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று (28) மற்றும் நாளை நவம்பர் (29 ஆகிய நாட்களில் இவ்வாறு  இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனவே, பிற்பகல் வேளையில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ரத்நாயக்க கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!