களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்

களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
களனி கங்கையின் நீர்மட்டம் குறைகிறது: நீர்ப்பாசனத் திணைக்களம்
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இதனால் களனி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமைகள் குறைந்து வருவதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. 

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தவிர, களுகங்கை மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டங்களும் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

களனி கங்கையின் நாகலம் வீதியில் உள்ள நீர் அளவீட்டின் நீர்மட்டம், இன்று (02) அதிகாலை 02 மணிக்கு 8 அடியாக இருந்ததுடன், அதிகாலை 03 மணிக்கு 7.9 அடியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், அங்கு பெரும் வெள்ள நிலைமை தொடர்ந்து நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -