வட மாகாண ஆளுநராக வேதநாயகன் நியமனம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றியவேளை, ஓய்வுக்கு 3 மாத காலமே இருந்தபோது யாழ். மாவட்டத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர் இன்று (25) ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச அதிபராக வேதநாயகன் பணியாற்றியவேளை, ஓய்வுக்கு 3 மாத காலமே இருந்தபோது யாழ். மாவட்டத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்.
முன்னைய ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை இவருக்கு வழங்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தரப்பு முன்வந்தமையால், வேதநாயகன் இன்று ஆளுநராகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.