வெடி விபத்தில் சிறுவன் உட்பட இருவர் காயம்
மாங்குளத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

மாங்குளத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் ஒரு சிறுவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வயோதிபர் மற்றும் சிறுவன் ஆகியோர் விறகு வெட்டச் சென்ற போதே நேற்று (07) இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 84 வயது முதியவரும் 6 வயது பேரனும் காயமடைந்துள்ளனர்.
விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கியே இவ்வாறு வெடித்திருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
வெடிப்பு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.