இன்றைய வானிலை தொடர்பில் முக்கிய அறிவித்தல் இதோ!
நாட்டின் இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இன்று பல பகுதிகளில் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் ஒரளவு மழை காணப்படும்.
இதையும் படிங்க: குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வீடுகள் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்து
நாட்டின் ஏனைய மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர், சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.