ஆசிரியர் தாக்கியதில் மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!
மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பாதுக்க பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடுமையாக தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம்டைந்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த நிலையில், வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் இந்த மூன்று மாணவர்களையும் தாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுக்க பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.