சொகுசு கார் மோதி பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் போக்குவரத்தை கையாளும் கடமையில் ஈடுபட்டிருந்த போது, சொகுசு கார் ஒன்று அதிகாரியின் மீது மோதியுள்ளது.

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் போக்குவரத்தை கையாளும் கடமையில் ஈடுபட்டிருந்த போது, சொகுசு கார் ஒன்று அதிகாரியின் மீது மோதியுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராவார்.
விபத்து தொடர்பில் காரை ஓட்டி வந்த தனியார் நிறுவனமொன்றில் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.