கைவிடப்பட்ட நாய்களுக்கு பராமரிப்பு நிலையத்தை திறந்தார் ஆளுநர்!
கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளுக்கு ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில், வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை, கிழக்கு ஆளுநர் திறந்து வைத்தார்.

கைவிடப்பட்ட நாய்களுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் ஊட்டச்சத்தான உணவுடன் பாதுகாப்பான இருப்பிடம் வழங்கும் நோக்கில், வாகரையில் நாய் பராமரிப்பு நிலையமொன்றை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
இவ்வாறான திட்டம், கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் செயற்படுத்தப்படும் முதல் திட்டமாகும்.