உயர்தரப் பரீட்சை குறித்த இன்று வெளியான விசேட அறிவிப்பு

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஜுலை 19, 2023 - 18:05
ஜுலை 19, 2023 - 18:07
உயர்தரப் பரீட்சை குறித்த இன்று வெளியான விசேட அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் குறித்த திகதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!