காலவரையறையின்றி பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அத்துடன், குறித்த பாடசாலைகளுக்கான பரீட்சை திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.