4 ஆயிரம் டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது - வெளியான தகவல்
இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

ரஷியாவின் கெர்ச் ஜலசந்தியில் சுமார் 9 ஆயிரம் டன் கச்சா எண்ணெயுடன் கடந்த வாரம் 2 கப்பல்கள் சென்று கொண்டிருந்தன. அனபா என்ற பகுதியில் சென்றபோது புயலால் இரு எண்ணெய் கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதின.
இந்த விபத்தில் கப்பல்களில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலக்கத்தொடங்கியதுடன், இதுவரை 4 ஆயிரம் டன் எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
இந்த எண்ணெய் கசிவு காரணமாக அப்பகுதியில் 2 டொல்பின்கள் செத்து கரை ஒதுங்கிய நிலையில், கச்சா எண்ணெய் தொடர்ந்து கடலில் கலப்பதை தடுக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.