அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த திட்டம்; வெளியான தகவல்!
அஸ்வெசும திட்டத்தில் பயன் பெறும் மக்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையில் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அஸ்வெசும கொடுப்பனவை மூன்று வருடங்களுக்குள் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும திட்டத்தில் பயன் பெறும் மக்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையில் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கமைய, சமுர்த்தி பிளஸ் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.